in

அதிமுகவையும் விற்பனை செய்வதில் திமுகவினர் ராஜதந்திரிகள் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் குற்றச்சாட்டு


Watch – YouTube Click

அதிமுகவையும் விற்பனை செய்வதில் திமுகவினர் ராஜதந்திரிகள் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் குற்றச்சாட்டு

 

புதுச்சேரியில் உள்ள உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும், அதனை நம்பியுள்ள உயிரினங்களை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி-கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், 164 ஏக்கர் நிலப்பரப்பிலான ஏரிகள் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக நூறாக குறைந்துள்ளது. இந்த ஏரிக்கு நடுவில் ஆழமான வாய்க்கால் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் விட்டிருப்பது மிக மோசமானது. நீர் ஆதாரத்தை பாதிக்கும் செயலாகும் என்றார்.

கேரளாவில் ஏற்கனவே இருந்த நீர்நிலையை மீட்கும் நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது.. ஆனால் புதுச்சேரியில் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் இயற்கை வளம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் வாழ்வாதாரத்துக்கு உகந்த மாநிலமாக புதுச்சேரி இருக்காது என காளியம்மாள் குற்றச்சாட்டினார்.

ஏரி நீரை பாழ்படுத்தி விட்டு பாட்டலில் பத்து ரூபாய் கொடுத்து நீர் குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு கொள்ளாத அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது எனவும் காளியம்மமாள் தெரிவித்தார்.

ஏரியை ஆக்கிரமிப்பு அதிமுக ஒரு செய்த தவறை திமுகவினர் தொடர்கிறார்கள் குற்றம் செய்வதில் இருவரும் சலித்தவர்கள் அல்ல.இருக்கும் ஏரி நிலத்தையும் மண் மூடி மொத்தமாக முடித்து விட வேண்டும் என்பதில் திமுக அதிமுகவும் சலித்தவர்கள் அல்ல அதிமுகவையும் கொண்டு சென்று விற்பனை செய்வதில் திமுகவினர் ராஜதந்திரிகள்.. மணல் குவாரி நடத்துவது,நீர் நிலைகளை மூடுவது, அதில் மணலை அள்ளிச் செல்வது, அதை பிளாட்டை போடுவது என்பது திமுகவின் ராஜதந்திரிகள் என காளியம்மாள் தெரிவித்தார்…

நாம் தமிழர் கட்சி போல பாஜகவை தனித்து நிற்க சொல்லுங்கள். பாஜக பலமான கட்சி என யார் கூறியது…? நாம் தமிழர் கட்சிக்கு 6% வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியின் மீதும் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மீதும் ஏறி பாஜக சவாரி செய்தனர்.

எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும் தாங்கள் தனித்து நிற்போம்.. அவர்கள் பணத்துக்காக அரசியல் செய்கிறார்கள்.. நாங்கள் இனத்துக்காக அரசியல் செய்கிறோம் என காளியம்மாள் தெரிவித்தார்..


Watch – YouTube Click

What do you think?

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியினை ஜான் குமார் எம்எல்ஏ வழங்கினார்