in

வந்தவாசியில் அமைச்சர் எ வ வேலு தேர்தல் பிரச்சாரம்


Watch – YouTube Click

வந்தவாசியில் அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரச்சாரம்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆரணி நாடாளு மன்ற திமுக வேட்பாளர் எம் எஸ் தரணி வேந்தனை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரப்புரை பயணம், சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி, நகர்மன்ற தலைவர் எச்.ஜலால் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலாளர் எ.தயாளன் அனைவரையும் வரவேற்றார்.

ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்,
இந்தியா கூட்டணி வேட்பாளராக, தளபதி அவர்களின் வாழ்த்துகள் பெற்ற வேட்பாளராக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்
நமது வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கின்றேன் .இது திமுக வின் கோட்டை . கோட்டையுள்ள ஊர் வந்தவாசி எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் எம் எஸ் தரணிவேந்தன் வெற்றிபெறச் செய்வீர் என நம்புகிறேன் என்று பேசினார்.

இந்த பரப்புரை பயணக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் நவாப் ஜான், நாகூர் மீரான் கிஷோர் குமார் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் திமுக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

பழனியில் உண்டியல் எண்ணப்பட்டதில் மொத்த காணிக்கை வரவு ரூ. 5 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவனூரில் பரப்புரை