மாவட்ட கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்ததால் பரபரப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) , கட்டிடம் கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கட்டிடம்இன்று வரை பராமரிப்பு செய்யப்படாததால் திடீரென கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள மேற்பூச்சு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கட்டிடத்தில் புள்ளியல் துறை அலுவலகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ,வேளாண் பொறியியல் துறை அலுவலகம் , மற்றும் தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது இதில் 300க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
திடீரெனே மேற்பூச்சு இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பெரும் விபத்து தவிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.