விவசாயிகள் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
விவசாயிகள் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் – பி.ஆர். பாண்டியன் பேட்டி*
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து 29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு அதிரடி தீர்மானம்!
சிப்காட்க்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் அய்யாக்கண்ணு, வழக்கறிஞர் ஈசன், கடலூர் ரவீந்திரன், தீட்சிதர் பாலு,மதுரை ராமன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்…
மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையான
நில ஒருங்கிணைப்பு சட்டம் (2023) – ஐ தமிழக அரசு எந்தவொரு விவாதமுமின்றி நிறைவேற்றியுள்ளது விவசாயிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தானது.
விவசாயிகளுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது மு.க.ஸ்டாலின் அரசு.
இப்போது குண்டர் சட்டம் திரும்பப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திராவிட மண் என பேசும் மு.க.ஸ்டாலின் அரசு கொடுமையை நடத்துகிறது.
எத்தனையோ மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் யார் மீதும் குண்டர் சட்டம் இதுவரை போடப்படாத நிலையில், தமிழகத்தில் இதுபோன்று நடப்பது ஏற்புடையதல்ல!
விவசாயிகள் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும். நிபந்தனை இல்லாமல் அனைவரும் விடுவிக்கப் பட வேண்டும்.
அமைச்சர் எ.வ.வேலு தனது அறிக்கையை திரும்ப பெற வேண்டும் அவருடைய கருத்து தவறானது, கண்டிக்கத்தக்கது. இந்த அறிக்கை திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது போல் உள்ளது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயலாற்றும் அமைச்சர். எ.வ.வேலு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலும் வருகின்ற 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமும்,
29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெறுகிறது.
விவசாயிகளின் மீதான விரோதப் போக்கு தொடர்ந்தால் அதன் விளைவுகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். களத்தில் எதிர்கொள்வோம் என ஆவேசமாக பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய விவசாயிகள் (விமலநாதன்) தமிழக முதலமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம்.