இங்கிலாந்தின் எடின்பாரோ நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த பெண் மிராண்டா டிக்சன். இவருக்கு வயது 49. இவர் தனது வீட்டின் கதவை பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது நியூ டவுன் ஏரியா விதிப்படி வீட்டின் கதவுக்கோ சுவருக்கோ பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்க கூடாது. இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து வீட்டு கதவு நிறத்தை மாற்றுமாறு மிராண்டாவை போலீசார் அறிவுறுத்தினர்.
இதனால் வேறு வழியின்றி அவர் கூடுதல் செலவு செய்து பிங்க் நிறத்தை பச்சை நிறமாக மாற்றினார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிங்க் எனக்கு பிடித்தமான நிறம். ஆனால் வேறு வழியின்றி வீட்டின் கதவை பச்சை நிறத்துக்கு மாற்றும் நிலைக்கு ஆளானேன். இல்லையென்றால் எனக்கு இருபதாயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனால் வேறு வழியின்றி கதவின் நிறத்தை மாற்றினேன் என்று தலைமேல் அடிக்காத குறையாக புலம்பினார்.
GIPHY App Key not set. Please check settings