இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கோரி செவிலியர்கள் 28 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஏராளமான செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐசியு, கேன்சர் வார்டுகளில் பணியாற்றும் செவிலியர்களும் போராட்டத்தில் குதித்ததால் அறுவை சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகினர்.
செவிலியர்களுக்கு 5% ஊதிய உயர்வை பிரிட்டன் அரசு அளிக்க முன் வந்தது. ஆனால் இதனை செவிலியர்கள் ஏற்க மறுத்து விட்டனர். மேலும் இதுபோன்ற போராட்டம் வரும் நாட்களில் மீண்டும் தொடரும் என்று செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings