in

கரூரில் செல்போன் கடையில் செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்


Watch – YouTube Click

கரூரில் செல்போன் கடையில் செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்

 

கரூரில் செல்போன் கடையில் நன்கொடை வாங்க வந்த அடையாளம் தெரியாத நபர் செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சிகளை பெற்று புகாரின் பேரில் போலீசார் விசாரணை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் கடைவீதியில் மனோஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை அமைந்துள்ளது. இன்று அந்த கடைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நன்கொடை கேட்டு வந்துள்ளார். கடையில் இருந்த பணியாளர்கள் வேலையில் மும்முறமாக இருந்ததால், அந்த நபரை சிறிது நேரம் காத்திருக்க சொல்லி இருக்கின்றனர்.

அப்போது அந்த கடையின் மேஜையில் மண்மங்கலத்தை சேர்ந்த பணியாளர் சக்திவேல் என்பவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய சுமார்
33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் இருந்துள்ளது.

சந்தர்ப்பம் பார்த்து அந்த நபர் தனது கையில் வைத்திருந்த காகிதத்தை செல்போன் மேல் வைத்து, யாரும் பார்க்காத நேரம் பார்த்து எடுத்து வைத்து விட்டு, நன்கொடையாக பத்து ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அறிந்த கடையின் உரிமையாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகாரை பெற்றுக் கொண்ட கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தலில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் உத்தரவு

அதிமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல்