இங்கிலாந்தில் பிரைமரி பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக வரும் நாட்களில் அவ்வப்போது அவர்கள் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டில் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தங்களுக்கு அதற்கும் கூடுதலாக ஊதிய உயர்வு வேண்டுமென தலைமை ஆசிரியர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். மேலும் கூடுதல் ஊதிய உயர்வை பிரிட்டன் அரசு தராவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஆசிரிய சங்கங்கள் ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பிரைமரி பள்ளிக்கூட ஆசிரியர்களும் ஊதிய உயர்வு கோரி இருப்பது பிரிட்டன் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings