லண்டனில் இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை கொலை செய்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஈஸ்ட் லண்டன் பெக்டான் டோல்கேட் ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த சிறுமி 14 வயது மதிக்கத்தக்க சிறுமி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவரது குடும்பத்தினர் சிலர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தீயை மூட்டி சிறுமியை கொலை செய்வது தெரியவந்தது. சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings