in

பிரான்சில் போலீசார் மீது பட்டாசை கொளுத்தி போட்ட போராட்டக்காரர்கள்

பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 இலிருந்து 64 ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முடிவு செய்தார். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறப்படுகிறது. எனவே அதிபரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தலைநகர் பாரிஸில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது பட்டாசை கொளுத்தி போட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் நாலாபுரமும் சிதறி ஓடினர். இந்த காட்சி இந்தியாவில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு படுத்துவதாக அமைந்தது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அதிபர் முடிவு செய்ததால் பிரான்ஸ் பற்றி எரிகிறது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

லண்டனில் போலீசாரை குத்திக் கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது

பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப் படையெடுக்கும் பிரிட்டன் மக்கள்