in

பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்ட் நிதியுதவி

ரிஷி சுனக் அறிவிப்பு

ப்பிரிக்கா, ஆசியா கண்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளை நாடி அகதிகளாக வருவது வழக்கம். இங்கிலீஷ் கால்வாய் வழியாக அவர்கள் சின்னஞ்சிறு படகுகளில் ஐரோப்பாவை நோக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பிரிட்டனை நோக்கி நூற்றுக்கணக்கான அகதிகள் சிறிய படகுகளில் நாள்தோறும் வந்து அடைக்கலம் தேடுகின்றனர். இதனால் பிரிட்டனில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதற்கு முடிவு கட்டும் வகையில், சட்டவிரோதமாக அகதிகள் பிரிட்டனில் குடியேறுவதை தடுக்க போவதாக பிரதமர் அறிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறும்போது, பிரிட்டனில் சட்ட விரோதமாக அகதிகள் குடியேறுவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். அகதிகளை தடுப்பதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்வதற்கு நான் தயார் என்று கூறினார்.

முன்னதாக அகதிகளை தடுப்பதற்காக மசோதா தயாராக உள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிராவர்மேன் கூறியிருந்தார். அகதிகள் மீது கடுமையான நிலைபாட்டை பிரிட்டன் அரசு கொண்டிருப்பதை எதிர்க்கட்சியான லேபர் கட்சி வன்மையாக கண்டித்தது. இதே போல ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையும் பிரிட்டன் அரசை விமர்சித்தது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பாரீஸ் நகரின் எலிஸி பாலசில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று சந்தித்தார். அப்போது சட்டவிரோதமாக பிரான்சில் குடியேறும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு இம்மானுவேல் மேக்ரானிடம் ரிஷி சுனக் வலியுறுத்தினார். இதற்காக பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்ட் நிதியுதவி அளிக்கப்படும் என ரிஷி சுனக் உறுதியளித்தார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெர்லினில் பெண்கள் மேலாடை இன்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி

பிரிட்டனில் கடுமையான பனிப்பொழிவு