இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவர்கள் தமிழிசை காட்டம்
இந்துக்களுக்கு ஒருபோதும் பாஜக எதிரானவர்கள் இல்லை 80% இந்துக்களுக்கு எதிரானவர்கள் திமுகவினர் தான் திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானம் குறித்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பரபரப்பு பேட்டி
எந்த ராமனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்தார்களோ அதே இராமன் தமிழகத்திற்கு மீண்டும் வரப்போகிறான் எனவும் புகழாரம்
புதுச்சேரி முதலியார்பேட்டையில் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக்பாபு நடத்திய மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தவர்.சேலம் திமுக மாநாட்டில் இந்துக்களின் எதிரிதான் பாஜக என தீர்மானம் போடப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தீர்மானத்தை பேச நான் விருப்பப்படவில்லை. திமுக தலைவர் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை கூறவில்லை. அப்படியென்றால் இந்துகளுக்கு எதிரானவர்கள் யார்.? என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். சனாதானத்தை அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். 500 ஆண்டுகாலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்த ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கோவில் இருந்த இடம்தான் என தீர்ப்பளித்துள்ளது. அதே இடத்தில் மசூதியும் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் 3 நாட்கள் தமிழகத்தில் தங்கி தமிழகத்தில் இருந்து நீரை எடுத்து சென்று அதன் மூலம் ராமருக்கு கும்பாபிஷேகம் நடக்க இருப்பது தமிழர்களுக்கு பெருமை.
எந்த மாநிலத்தில் ராமருக்கு செருப்பு மாலை போட்டார்களோ அதே இடத்தில் இருந்துதான் கும்பாபிஷேக நீர் எடுத்து செல்லப்படுகிறது. பிரதமரை அனைவரும் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். கோ பேக் என பிரதமரை கூறியவர்கள் தான் கேலோ இந்தியாவை தொடங்கி வைக்க அழைத்துள்ளனர்.
நான் எழுதிய கவிதையை இணையதளத்தில் விமர்சனம் செய்கிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றாலும், அவசர சிகிச்சை எப்போதும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. ஊழியர்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜிப்மரில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அது தவறானது அல்ல.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை அரசியலாக பார்க்கின்றனர். சொந்த இடத்திற்கு ராமர் திரும்புகிறார். தமிழகத்திலும் ராமர் திரும்பி வருகிறார். எந்த மாநிலத்தில் ராமரை வைத்து அரசியல் செய்தார்களோ அங்கு வந்து ராமர் நிலைநிற்க போகிறார் என தெரிவித்தார்…