பர்மிங்ஹாம் நகரில் கடந்த சனிக்கிழமை பேருந்து மோதி 15 வயது மதிக்கத்தக்க சிறுமி பரிதாபமாக பலியானார். முன்னதாக அந்த சிறுமி மீது பேருந்து மோதியதும் அங்கிருந்த நபர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை வேஸ்ட் மெட்லான்ஸ் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு தாங்கள் ஆறுதல் கூறிக் கொள்வதாக வெஸ்ட் மெட்லான்ஸ் காவல்துறை கமிஷனர் கெயில் அர்னால்டு கூறினார்.
பர்மிங்ஹாமில் பேருந்து மோதி சிறுமி பலி

GIPHY App Key not set. Please check settings