ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவில் கற்பக விருட்சக வாகனத்தில் பவனி
திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவில் உற்சவர் பெருமாள் கற்பக விருட்சக வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு உற்சவர் பெருமாள் கற்பக விருட்சக வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று துளசியால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்களுடன் வாகனங்களில் எழுந்தருள செய்து பெருமாள் திருவீதி உலா வந்தார் கற்பக விருட்சக வாகனத்தில் பவனி வந்த பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.


