in

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு

https://youtu.be/Jbg0DGMzTX4%5B/embed%5D

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு

புதுச்சேரி திருக்கனுார் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக சீனியர் எஸ்.பி., நார சைதன்யா போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு

புதுச்சேரி அடுத்த திருக்கனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளான செட்டிப்பட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் வீடு உள்ளிட்ட ஆண்டியார் பாளையம், வாதானுார், மண்ணாடிப்பட்டு சந்தை புதுகுப்பம் கிராமங்களில் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், திருட்டு சம்பவங்கள் தொடர்பான போலீசாருக்கு இதுவரையில் எந்தவித தடயமும் கிடைக்காமல், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே, போலீசார் மூலம் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் எதிரே விழிப்புண்வு அறிவிப்புபேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதியம் 12:00 மணி அளவில் சீனியர் எஸ்.பி., நார சைதன்யா திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொடர் திருட்டு சம்பவங்களுகான காரணங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜா ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், ஸ்டேஷனில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த சீனியர் எஸ்.பி., ஸ்டேஷன் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார். தொடர்ந்து, திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மர்மநபர்களை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு சிலை | Statue Of Former Singapore Prime Minister

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் திருக்கோயில் கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது…