in

துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா


Watch – YouTube Click

துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா

 

திருக்கார்த்திகை தீபத் திருவிழா… நகர காவல் தெய்வமான துர்க்கைஅம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது…

மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன் காமதேனு வாகனத்தில் வலம் வந்த துர்க்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17- ம்தேதி அண்ணாமலையார் சந்நதியில் உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில்கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.

நிறைவு நாளான நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2668அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ.துர்க்கை அம்மன் உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ.துர்க்கை அம்மன் சன்னதியில், ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், அபிஷேகப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு வண்ண வண்ண மலர் மாலைகளைக் கொண்டு மாலைகள் தொடுத்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தோலில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்த துர்க்கை அம்மன், திருக்கோவிலுக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கைகள் முழங்க மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெர்பயிர்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் சர்வ பூபால வாகன புறப்பாடு