in

தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது புத்தாடை அழகு பொருட்கள் வாங்க குவிந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.

தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிற
து. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் தான் முதலிடம் பிடிக்கும். இவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் இருக்கும்.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக முன்பே பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு வாங்க தொடங்கிவிட்டனர். இன்று தஞ்சையில் திரும்பிய பக்கமெல்லாம் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் தஞ்சை நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளி, கடை முன்பு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் தென்படுகின்றனர்.

தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, கீழராஜவீதி. வீதிதெற்குவீதி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்ட நெரிசல் உள்ளது. இன்று காலை முதல் மாலை வரை மழை இல்லாததால் தீபாவளி பண்டிகைக்காக தஞ்சையில் ஏராளமான தரைக்கடைகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இறுதி கட்ட பட்டாசு விற்பனை

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுப்பா