in

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு | Senthil Balaji Brother House Raid

https://youtu.be/RpxTdO4HdWQ%5B/embed%5D

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் குறிப்பாக அவரது தம்பி அசோக்கின் கரூர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் இல்லத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு, அசோக்கிற்கு போன் செய்து வர சொல்லியுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள ஆவணங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள் இவற்றையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களை எடுத்து வர சொல்லியுள்ளனர்.

செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை என்று தெரிந்ததும் இன்று நடைபெறாவிருந்த கரூர் மாநகராட்சி கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அசோக் வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக திமுகவினரும் அப்பகுதியில் கூடினர்.
வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டும் அவர்கள் வந்த காரை சேதப்படுத்தியும் திமுக தொண்டர்கள் பிரச்னை செய்ததால் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

என் வீட்டில் சோதனை நடக்கவில்லை செந்தில் பாலாஜி மழுப்பல் | Senthil Balaji House Raid

புதிய நாடாளுமன்றத்தால் நாட்டுக்கு பெருமை சசிகலா பேட்டி | Sasikala Latest Speech